உயர் மின் கோபுரம் அமைக்கப்படுமா?

Update: 2022-09-17 14:07 GMT

அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து தேரடி வரை தினமும் பொதுமக்கள் அதிகளவில் நடந்தும், இருசக்கர வாகனத்தின் மூலம் கடை தெருவிற்கு சென்று வருகின்றனர். மேலும் இந்த பகுதி பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய ஊர்களுக்கு செல்லும் முக்கிய வழியாக திகழ்கிறது. ஆனால் இந்த பகுதியில் போதிய மின் விளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த பகுதியாக உள்ளது. சில சமயங்களில் இரவு நேரங்களில் சாலை நடுவே மாடுகள் படுத்துள்ளது. இதன் காரணமாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு விபத்தும் நிகழ்ந்துள்ளது. இந்த நிலை நிரந்தரமாக உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரியலூர் பஸ் நிலையம் நுழைவாயில் முதல் தேரடி வரையுள்ள பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்