சீரமைக்க வேண்டும்

Update: 2022-07-08 12:33 GMT
குழித்துறை கழுவன்திட்டையில் இருந்து ஞாறான்விளை நோக்கி செல்லும் சாலையில் அமலாபுரம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் அருகில் இருந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு செல்லும் காங்கிரீட் சாலையின் தொடக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சாலையில் சாய்ந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வினு, அமலாபுரம், குழித்துறை.

மேலும் செய்திகள்