கிருஷ்ணகிரி நகரில் மின்கம்பங்களில் உள்ள சில தெருவிளக்குகள் எரிவதில்லை. மேலும் அந்த மின்கம்பத்தில் இருந்து வயர்கள் ஆபத்தான நிலையில் தொங்கியபடி உள்ளது. தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் வாகனங்கள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். மேலும் இதனை சாதகமாக பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்டுகிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மின்வாரிய துறையினர் தெருவிளக்குகளை சரிசெய்து எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலையன், கிருஷ்ணகிரி.