தெருவிளக்கு வசதி இன்றி பொதுமக்கள் அவதி

Update: 2022-08-20 11:57 GMT

திருச்சி மாநகராட்சி 47-வது வார்டுக்கு உட்பட்ட வெங்கடேஸ்வராநகர் அருகே மொராய்கார்டன் ரன்வேநகரில் 10 வீதிகள் உள்ளன. 10 வீதிகளிலும் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் ஒரு வீதியில் கூட தெருவிளக்கு வசதி இல்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அனைத்து வீதிகளும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் பெண்கள், குழந்தைகள் வெளியே வர அஞ்சுகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தெருவிளக்கு வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்