செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி வரை உள்ள நெடுஞ்சாலையில் உள்ள மின் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வாகனத்தில் செல்பவர்கள் சிரமப்படுவதோடு விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும்.