தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-08-17 16:03 GMT
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மனவளக்கரையில் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்ட மின்கம்பம் பழுதடைந்து மிக மோசமான நிலையிலும் ஆபத்தான நிலையிலும் உள்ளது. இதை மாற்றி புதிய மின் கம்பம் நட வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக மின்வாரிய அதிகாரிகள் பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி, புதிய கம்பத்தை நட்டனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்