பழுதடைந்த மின்கம்பம் மற்றும் தெரு விளக்குகளை மாற்றியமைக்க கோரிக்கை

Update: 2022-08-09 15:13 GMT
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநராட்சி உட்பட்ட 20-வது வார்டில் உள்ள மேற்கு கோபாலபுரம் 4-வது மெயின் ரோடு மற்றும் 5-வது மற்றும் 6-வது தெருவில் உள்ள மின் கம்பங்கள் அனைத்தும் 1986-ஆம் வருடம் அமைக்கப்பட்டது. இப்பொழுது 37 வருடங்கள் ஆகியும் புதுப்பிக்காமல் அனைத்தும் பழுதடைந்து தலையில் விழும் நிலையில் உள்ளது. மேலும் தெரு விளக்குகள் பழுதடைந்து சரியாக எரிவதுமில்லை . எனவே இரவு நேரத்தில் மக்கள் சாலையில் செல்லவே சிரமமாக உள்ளது. எனவே பழுதடைந்த மின்கம்பம் மற்றும் தெரு விளக்குகளை மாற்றியமைக்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்