மின்கம்பம் இங்கே; ‌‌மின்விளக்கு எங்கே?

Update: 2022-07-31 10:13 GMT
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதி சென்னை-கும்பகோணம்-சீர்காழி நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் சோலார் மின்விளக்கு பொருத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோலார்மின்விளக்கு அகற்றப்பட்டது. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மின்விளக்கு அகற்றப்பட்டதால் மின்கம்பம் மட்டும் சாலையோரத்தில் காட்சி பொருளாக நிற்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மீண்டும் சோலார் மின்விளக்கு பொருத்த நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்