எரியாத தெரு விளக்குகள்

Update: 2022-07-30 12:05 GMT

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கணேஷ் நகர் கைலாஷ் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் இரவு நேரத்தில் எரிவது இல்லை. மேலும் சில இடங்களில் மின்கம்பங்கள் இருந்தும் அதில் மின் விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து இருப்பதினால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் இப்பகுதியில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்