பகலில் ஒளிரும் விளக்கு

Update: 2022-07-27 13:42 GMT

வெள்ளகோவிலில் குமாரவலசு செல்லும் சாலையில் 2-வது வார்டில் தனியார் கியாஸ் அலுவலகம் அருகே சாலையில் உள்ள தெருவிளக்கு காலையில் இருந்து மாலை வரை ஒளிருகிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புக்குத்தான் மின் கட்டணம் அதிகமாகும். மேலும் மின் விளக்கு விரைவில் பழுதடையும். எனவே பகல் நேரத்தில் மின்விளக்குள் ஒளிர்வதை கண்டறிந்து ஆப் செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்