புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் இலுப்பூர் சாலையில் செங்கப்பட்டி என்னும் இடத்தில் சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் ஒன்று அருகே இருக்கும் பனைமரத்தின் மீது சாய்ந்து கிடக்கிறது. இதனால் அந்த மின்கம்பத்தில் உள்ள மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதிகள் முழுவதும் இருட்டாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.