ஒளிராத மின்விளக்குகள்

Update: 2022-07-26 13:07 GMT
கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் இரவு நேரத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் அங்கு அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளில் ஏராளமான விளக்குகள் இரவு நேரத்தில் ஒளிர்வதில்லை. இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாய நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஒளிராத விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்