ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2023-09-20 10:23 GMT

பந்தலூர் அருகே அம்பலமூலா பஜாரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் பலரும் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அங்குள்ள தெருவிளக்குகள் ஒளிருவது இல்லை. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்