செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பேரமனூர் ரயில்வே கேட் சாலை எம்.ஜி.ஆர். தெரு அருகே சாலையோரமாக உள்ள மின்கம்பத்தில் சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் எலும்பு கூடு போல் வெளியே தெரிகிறது. பலத்த காற்று வீசும் போது விபத்து ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மின்சார வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.