ஆபத்தான மின்மாற்றி

Update: 2023-09-10 11:34 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் அருமந்தாம்பட்டி என்னும் கிராமத்தில் சாலையோரத்தில் மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின் கம்பங்கள் சிதிலமடைந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்மாற்றி முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்