தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2023-09-10 11:20 GMT

பந்தலூர் தாலுகா பொன்னானி அருகே சக்கரை குளம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்