ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-09-06 12:09 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், நாகுடி ஊராட்சியில் உள்ள வேட்டனூர் முக்கம் பஸ் நிறுத்தம், போலீஸ் நிலையம் சாலையில் பயணிகள் நிழற்குடை அருகில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் ஒரு மின்கம்பம் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்