எலும்பு கூடான மின்கம்பங்கள்

Update: 2023-08-30 11:28 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் அருகே உள்ள பாப்பாவயல் மற்றும் போரம் ஆகிய கிராமங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு செல்லும் நூற்றுக்கணக்கான மின்கம்பங்களில் விரிசல் ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடாய் காட்சியளிக்கின்றன. இதனால் காற்றடிக்கும் நேரத்தில் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் கால்நடைகள் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்