மின்விளக்குகள் ஒளிருமா?

Update: 2023-08-27 11:24 GMT

மயிலாடுதுறை மாவட்டம் எடமணல்-திருநகரி சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்விளக்குகள் கடந்த சில வாரங்களாக ஒளிராமல் காட்சி பொருளாக இருக்கிறது. இதன்காரணமாக இரவு நேரத்தில் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்