சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-08-27 07:58 GMT

கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பாத்திமாபுரத்தில் இருந்து கொல்லங்கோட்டிற்கு செல்லும் சாலையில் வலியவிளை உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் அந்த மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் நடுவதற்கு அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்