சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-08-16 09:01 GMT

கல்லுக்கூட்டம் பஞ்சாத்துக்கு உட்பட்ட ஊற்றுக்குழி சந்திப்பில் இருந்து பெறியாப்பள்ளி, நெடியாங்கோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள பல மின்கம்பங்கள் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுபாஷ் சந்திரபோஸ், ஊற்றுக்குழி.

மேலும் செய்திகள்