முறையான தெருமின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2023-07-30 18:22 GMT
சங்கராபுரம்-திருக்கோவிலூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள நரியந்தல், தோப்புச்செரி, திருப்பாலபந்தல், மாடம்பூண்டி, கடம்பூர், மரூர், மரூர் புதூர், அரியலூர், அத்தியூர், தொழுவந்தாங்கல் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தெருமின்விளக்குகளில் போதிய அளவு வெளிச்சம் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே அதிக ஒளிதரும் முறையான மின்விளக்குகளை பொருத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் செய்திகள்