மூடிக்கிடக்கும் மின்கட்டண வசூல் மையம்

Update: 2023-07-23 15:50 GMT

வில்லியனூர் தட்டாஞ்சாவடி மின்துறை அலுவலகத்தில் இயங்கி வந்த மின் கட்டண வசூல் மையம் கடந்த 2 மாதங்களாக மூடியே கிடக்கிறது. இதனால் அரும்பார்த்தபுரம், மணவெளி, வி.தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த மக்கள் மின் கட்டணம் செலுத்த வில்லியனூர் செல்லும் நிலை உள்ளது. மின் துறை அதிகாரிகள் நடவடிக்கை மூடப்பட்ட மின்கட்டண மையத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்