பழுதடைந்த மின்கம்பங்கள்

Update: 2023-07-23 10:22 GMT

கோவை கணேசபுரம் சிட்கோ பகுதியில் உள்ள 2 மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அந்த மின்கம்பங்கள் வலுவிழந்த நிலையில் காணப்படுகின்றன. அவை பலத்த காற்று வீசும்போது உடைந்து விழக்கூடும். அப்போது அந்த வழியாக செல்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. எனவே உடனடியாக அந்த 2 மின்கம்பங்களையும் மாற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்