எரியாத மின்விளக்கு

Update: 2023-07-16 15:51 GMT

 பெரிய கொடிவேரி பேரூராட்சிக்குட்பட்ட அரக்கன்கோட்டை வாய்க்கால் மற்றும் கொடிவேரி அணைப்பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாலம் கட்டப்பட்டது. இதன் ஒருபுறத்தில் சில மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. ஆனால் கடந்த சில மாதங்களாகவே மின் விளக்குகள் எரியாமல் கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் கொடிவேரி பாலம் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். இருளை பயன்படுத்தி சிலர் பாலத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். எனவே மின்விளக்குகளை ஒளிரசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்