'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2023-07-12 15:06 GMT

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 11-வது வார்டில் மின்கம்பம் சாக்கடை கால்வாயையொட்டி உள்ளது. இந்த மின்கம்பத்தின் அஸ்திவாரம் சிமெண்டு கான்கிரீட்டால் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இது பலவீனமிழந்து எப்போது வேண்டுமானாலும் கீழே சாயும் நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை உடனே மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்