தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2023-06-25 09:24 GMT

கோவை காளப்பட்டி ரோடு நேருநகர் ராமலிங்க அடிகளார் வீதியில் தெருவிளக்கு வசதி இல்லாதால், இரவு நேரங்களில் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். மேலும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்