தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள்

Update: 2023-06-07 14:24 GMT

பென்னாகரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிருஷ்ணாபுரத்தில், பிரதான வீதியில் அமைந்துள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனை அடுத்து அந்த பகுதி பொதுமக்கள் மூங்கில்களை கட்டி, தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை தூக்கி நிறுத்தியுள்ளனர். இதனால் மழைக்காலங்களில் மின்சாரம் தாக்கி உயிர் பலியாகும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பியை உயர்த்தி கட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- சரவணன், பென்னாகரம்.

மேலும் செய்திகள்