உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை

Update: 2023-06-04 17:15 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் -ஜலகண்டாபுரம் மெயின் ரோட்டில் பனங்காட்டு மேடு மற்றும் ஆரூர்பட்டி ஏரி பஸ் நிறுத்தம் பகுதி வரை நெடுஞ்சாலையின் இருபுறமும் மின் கம்பம் பொருத்தப்படாமல் உள்ளது. ஆரூர்பட்டி பஸ் நிறுத்ததில் வசிப்பவர்கள் மற்றும் பனங்காட்டு மேடு மற்றும் ராமிரெட்டிப்பட்டியில் வசிப்பவர்கள் இந்த நெடுஞ்சாலை வழியாக தான் செல்கின்றனர். இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்