குறைந்த மின்னழுத்தத்தால் மக்கள் பாதிப்பு

Update: 2023-06-04 13:39 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி ஊராட்சியில் 2-வது மற்றும் 3-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாகவே குறைந்த மின்னழுத்தத்தில் மின்சாரம் கிடைத்து வருகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வந்தன. இது குறித்து மணமேல்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தவுடன் 2021-ம் ஆண்டு மின்மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த மின்மாற்றிக்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக குறைவான மின்னழுத்தத்தில் மின்சாரம் கிடைப்பதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே மின்சார வாரியம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து புதிய மின்மாற்றிக்கு மின் இணைப்பு வழங்கி குறைந்த மின் அழுத்தத்திற்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொளகிறோம். 

மேலும் செய்திகள்