சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா அலுவலகம் அடுத்துள்ள மேச்சேரி பிரிவு ரோட்டுக்கு அருகில் காமாண்டம்பட்டி கிராமத்துக்கு செல்லும் சுரங்கபாதை உள்ளது. இந்த சுரங்க பாதையில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சுரங்கபாதையில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?