உயர்கோபுர மின்விளக்கு தேவை

Update: 2023-05-28 16:59 GMT

உத்தமபாளையத்தில் அம்மாபட்டி விலக்கு பகுதியில் தாலுகா அலுவலகம், நுகர்பொருள் வாணிப கிடங்கு, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை உள்ளன. இதனால் அந்த பகுதியில் எப்போது பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும். ஆனால் இரவு நேரங்களில் அம்மாபட்டி விலக்கு பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. போதிய தெரு விளக்கு வசதி இல்லாததே அதற்கு காரணம். இதனால் இரவு நேரத்தில் அப்பகுதிக்கு வரும் பொதுமக்கள் அச்சமடையும் சூழல் உள்ளது. எனவே அம்மாபட்டி விலக்கு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்