ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2023-04-30 09:43 GMT

கோவை குனியமுத்தூர் பாலக்காடு மெயின்ரோட்டில் ஆத்துபாலம் பகுதியில் இருந்து சுகுணாபுரம் சோதனைச்சாவடி வரை தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக ஒளிருவது இல்லை. இதன் காரணமாக இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே மீண்டும் தெருவிளக்குகளை ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்