புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் இருக்கும் துணைமின் நிலையம் போதிய பராமரிப்பு இன்றி உள்ளது. மேலும் துணைமின் நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளதால் பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து துணைமின் நிலையத்தை மறு சீரமைப்பு செய்து புதிய மின் மாற்றிகள் அமைத்து, துணைமின் நிலையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.