உயர்மின்கோபுர விளக்கு ஒளிருமா?

Update: 2022-07-21 15:14 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருவோணத்தை அடுத்த மூவர் ரோடு பகுதியில் உயர்மின்கோபுரவிளக்கு அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால் உயர்மின்கோபுர விளக்கு கடந்த சில வாரங்களாக சரிவர எரியவில்லை. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி இருளை பயன்படுத்தி சமூகவிரோதிகள் பொதுமக்கள், வாகனஓட்டிகளிடம் வழிப்பறியில் ஈடுபடும் சம்பவங்களும் அவ்வபோது நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள உயர்மின்கோபுர விளக்கு மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்