தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2023-04-12 09:46 GMT

சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மாதப்பூரில் இருந்து சங்கத்துறை செல்லும் வழியில் நொய்யல் ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த சாலைேயாரத்தில் 7 மின்கம்பங்கள் உள்ளன. ஆனால் மின்விளக்கு பொருத்தப்படவில்லை. இதன் காரணமாக இரவில் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. எனவே அங்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்