இருளில் மூழ்கிய சாலை

Update: 2023-03-26 15:48 GMT

தர்மபுரி நகரில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் பாப்பாரப்பட்டி- பாலக்கோடு கூட்ரோடு அமைந்துள்ளது. இந்த பகுதியில் அதியமான்கோட்டையில் இருந்து ஓசூர் வரை நடக்கும் 4 வழி சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இன்றி இருளில் மூழ்கி காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையைக் கடக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் திருட்டு அச்சமும் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்