ஆபத்தை உணராமல் தீவைப்பு

Update: 2023-03-26 14:43 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தேர்வு நிலை பேரூராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆங்காங்கே குப்பைகளை சேகரித்து குப்பை கிடங்குக்கு கொண்டுசேர்க்காமல் ஓரிடத்தில் ஒன்று சேர்த்து தீ வைத்து கொளுத்தி வருகின்றனர். திருச்சி சாலையில் இதேபோல் குப்பைகள் எரிக்கப்படும் போது மிக அருகிலேயே மின் மாற்றி உள்ளது. இதன் அருகே தீ வைப்பதால் பெரும் அளவில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்