எரியாத உயர்மின் கோபுர விளக்கு

Update: 2023-03-26 12:08 GMT

புதுக்கோட்டை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில், நெடுஞ்சாலையில் இருந்து திருமயம் ஊருக்கு உள்ளே செல்லும் வழியில் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்விளக்கு கடந்த 5 மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதினால் சட்ட விரோத செயல்களும், விபத்துகளும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்