எரியாத மின்விளக்குகள்

Update: 2023-03-15 17:01 GMT

தர்மபுரி- பாலக்கோடு சாலையில் பாப்பாரப்பட்டி பிரிவு சாலை அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் இரவு நேரங்களில் எரிவதில்லை. இதனால் இந்த பகுதி இரவு நேரங்களில் இருளில் மூழ்கி காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பாலத்தில் நடந்து செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். நீண்ட நாட்களாக எரியாமல் உள்ள இந்த மின் விளக்குகளை மீண்டும் எரியச் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்