தெருமின்விளக்கு அமைக்க வேண்டும்

Update: 2023-03-12 18:08 GMT
கல்வராயன்மலை ஒன்றியம் தும்பை ஊராட்சியில் பல்வேறு இடங்களில் தெருமின்விளக்குகள் இல்லாமல் உள்ளது. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உள்ளது. எனவே தும்பை ஊராட்சி குடியிருப்பு பகுதிகளில் தெருமின்விளக்கு அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்