தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2023-03-12 09:16 GMT

பந்தலூர் அருகே உள்ள இரும்பு பாலம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு காட்டுயானை, சிறுத்தைப்புலி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் அந்த பகுதியே இரவில் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதன் காரணமாகவே வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. எனவே போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்த தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்