தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2023-03-05 07:31 GMT

சூலூர் அருகே பாப்பம்பட்டியில் பல்லடம் செல்லும் சாலையில் உள்ள கிருஷ்ணன் கார்டன், எம்.ஜி.ஆர். நகர், கணபதி மாநகர், செந்தூர் நகர் ஆகிய இடங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் அந்த இடங்கள் இருள் சூழந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக இரவில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. மேலும் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்