தெருவிளக்குகள் ஒளிருமா?

Update: 2023-02-26 11:25 GMT

தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள தெருக்களில் பொதுமக்கள் வசதிக்காக ஆங்காங்கே மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இரவு நேரங்களில் சரிவர எரிவதில்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் தெருக்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். தெருவிளக்குகள் ஒளிராத காரணத்தினால் சாலையின் நடுவே படுத்துகிடக்கும் நாய்கள், மாடுகள் மீது வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தெருவிளக்குகள் முறையாக ஒளிர நடவடி்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்