விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டி அருந்ததியர் காலனி தெருவின் சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் மின்கம்பம் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விடுமோ என அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?