தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2026-08-09 13:08 GMT

கரூர் - திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையில் வெள்ளியணை அருகே செல்லாண்டிபட்டி பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இப்பகுதியில் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அப்பகுதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மேம்பால தூண்களில் மோதி அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே, விபத்துகளை தவிர்க்கும் வகையில் மேம்பாலத்தின் அடியில் இருபுறமும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்