தெருவிளக்கு அமைக்கப்படுமா?

Update: 2023-02-26 08:21 GMT

பொள்ளாச்சி அருகே ஜமீன் புரவிபாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஆனால் இதன் முன்புறத்தில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் ஆரம்ப சுகாதார நிலைக்கு வரும் பொதுமக்கள் இருள் சூழ்ந்த சாலை வழியாக நடந்து வர வேண்டிய நிலை உள்ளது. மேலும் பள்ளி மற்றும் சுகாதார நிலைய பகுதியில் இரவில் சமூக விரோத செயல்கள் நடைபெறும் அபாயமும் நிலவுகிறது. எனவே அங்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 

மேலும் செய்திகள்