எரியாத தெருவிளக்குகள்

Update: 2023-02-22 11:42 GMT

தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் கந்தர்வகோட்டை கடை வீதியின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் பொதுமக்கள் இருளில் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும் கந்தர்வகோட்டை அருகில் சுங்கச்சாவடி வைத்து வாகனங்களுக்கு சுங்கவரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த சாலையில் உள்ள மின் கம்பங்களில் உள்ள மின் விளக்கை சீரமைப்பது மற்றும் சாலையில் உள்ள குப்பைகளை அகற்றுவது, சாலைகளுக்கு உரிய எச்சரிக்கை வண்ணங்கள் தீட்டுவது போன்ற பணிகளை சுங்கச்சாவடியினர் கவனிப்பதில்லை. ஆகவே இந்த குறைகளை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்