சாலையின் நடுவே உள்ள மின்கம்பம்

Update: 2023-02-15 15:59 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கீராத்தூர் ஊராட்சியில் செங்க மோட்டான் தெருவுக்கு செல்லும் சாலையில் குடியிருப்புகள் உள்ள பகுதியில் சாலையின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் இது விவசாயம் நிறைந்த பகுதி என்பதால் வாகனங்களில் விவசாய இடு பொருட்களை கொண்டு செல்லவோ, அறுவடை பயிர்களை சந்தைக்கு எடுத்து வரவோ முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையின் நடுவே உள்ள இந்த மின் கம்பத்தை அகற்றி, மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்