ஒளிராத தெருவிளக்கு

Update: 2023-02-05 09:48 GMT

பொள்ளாச்சி நந்தனார் காலனி பழமுதிர் நிலையம் எதிரே உள்ள தெருவிளக்கு கடந்த சில நாட்களாக ஒளிருவது இல்லை. இதனால் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக அந்த பகுதி பஸ் நிறுத்தம் உள்ள பகுதி என்பதால், அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் அச்சமடையும் நிலை உள்ளது. மேலும் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே பழுதடைந்த தெருவிளக்கை மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்